நாசினிகள் — நோயை உண்டாக்கும் நுண்கிருமிகளின் வளர்ச்சியைத் தடுக்கும் அல்லது செயலிழக்க வைக்கும் மருந்துகள். நாசினிகள் இரண்டு வகைப்படும்: 1. உடலின் தோல் மேல் பயன்படுத்தப்படும் உடற்நாசினி (என்டிஸ்பெட்டிக்), 2. உயிரற்ற மேற்பரப்புகளுக்குப் பயன்படுத்தப்படும் அசரநாசினி (டிசின்ஃபெக்டன்ட்).
"பொதுவாகப் பயன்படுத்தும் உடற்நாசினிகள் சாராயம், டெட்டோல், கறையம் போன்றவையாகும்."
“உடற்நாசினிகள் பொதுவாக முதலுதவி பெட்டியில் கிடைக்கிறது. உடலில் வெட்டு அல்லது காயம் ஏற்படும்போது, காயத்தைச் சாதாரண உப்பு அல்லது தூய்மையான நீரில் சுத்தம் செய்ய வேண்டும், பின்னர் காயத்தின் மீது சாராயம் போன்ற உடற்நாசினிகளைப் பயன்படுத்த வேண்டும்.”
“முதலுதவிப் பசைகள் என்றும் அழைக்கப்படும் உடற்நாசினிகள் எளிதாக மருந்துக்கடைகளில் கிடைக்கின்றன."
"பறவை சளிக்காய்ச்சல் பரவும் போது, அதிகாரிகள் ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை பாதிக்கப்பட்ட பகுதியைக் கண்காணித்து அசரநாசினி தெளிப்புகளைப் பயன்படுத்த வேண்டும்.”